வியாழன், 28 மார்ச், 2013

அழகிய மனைவியும் அழகற்ற காலை பொழுதும்

           அழகிய மனைவியும் அழகற்ற காலை      பொழுதும்


ஓவ்வொரு புருசனுக்கும் பொண்டாட்டி கோபத்தில் இருக்கும் போது மனசு குழப்பத்தில் போய்விடும் இவள் தன்னுடைய எந்த குற்றத்ததை கண்டுபிடித்து விட்டாள் என.பிறகு ஏதோ அப்படி இப்படி தஐh பண்ணி அறிஞ்சா அது ஒரு சப்பை மேட்டராக இருக்கும்.மெயின் மேட்டர் பற்றி ஒரு துளி கூட அவங்களுக்கு தெரிந்து இருக்காது.
உண்மையாக மனைவி கோபத்தில் இருக்கிறாளா?இல்லை சாதரணமாகவே அப்படி தான் இருக்கிறாங்களா? என அறியவே அதிகமான ரைம் போய் விடும்.
நூறு வீதம் கோபத்தில் தான் இருக்கிறாங்கள் என அறிய கூடிய சத்தர்ப்பம் ரெடிமேட் தோசை அதாவது மாவைக்கரைத்து தோசைத்தட்டிலே போட்டு வைத்தாலோ அல்லது உப்பு மா கிண்டி வைத்தலோ தெரியும் ஆள் போபத்தில தான் இருக்கின்றா என்று.
ஆனால் எந்த குணத்திலே இருக்கிற என அறிய முடியா தருணம் காலை நேரம் தான்
நித்திரை கலைந்து தலையை நீட்டி ஒரு ரீ கேட்போம் என தலையை தூக்கினால் சளரென முதுகிலே அடி விழுவது போல பிள்ளைகளிடம் ரீவி ரிமோட்டை ஆக்கிரரோசமாக பறித்து கட்டிலில் எறிவது தெரியும்
பிள்ளைகளோ காலை கையை உதறி ரிமோட் வேணும் என அழுவார்கள்.
இந்த நேரத்தில்
ரீ கேட்போமா ?வேண்டாமா? ஏன ஒரு தர்ம போரட்டமே நடக்கும்.கருமம் பிடித்த அந்த ரீயை எந்த கருமம் பிடித்தவன்; கண்டுபிடித்தான் என முகம் தெரியாத ஒரு குழுவிடம் கோபமே வரும் ஆனல் அந்த ரீயை மோர்னீங்கில் குடிக்க விட்டால் அன்று முழுவதும் ஒரு தூக்குத்தண்டனை கைதி போல அலைய வேணும் ஆபிசில் நுளையும் போதே ஏதோ nஐயிலுக்கை போற பீல் தான் இருக்கும்
காலையில் பெண்கள் கோபமாக இருப்பதற்க்கு ஆயிரம் காரணம் அதில் முக்கியமான காரணம் அவங்கள் எல்லாம் மோர்னிங் 5 மணிக்கு டாண் என எழும்பி டிங் டிங் என வேலை செய்ய நாங்க மட்டும் எட்டு மணிக்கு மேலையும் ஆமைபோல போர்வைக்குள் தலையை வைத்து இருப்பது மிக முக்கியமான காரணம்.இன்னும் தொள்ளயிரத்து தொண்ணுற்றி ஒன்பது காரணங்களில் நல்ல படிச்ச பெரிய பெரிய விஞ்ஞானிகள் அறிஞர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு ஏழட்டு காரணம் மட்டும் தான் கண்டுபிடித்து இருப்பார்கள் மற்ற காரணம் எல்லாம் தங்கமலை இரகசியம் போல இன்னும் கண்டு பிடிக்காமலே இருக்கின்றது.
ஆனால் இந்த தத்துவ விசரங்களுக்கு எல்லாம் ஒரு ரீ கிடைக்காது.ரீ கிடைக்க வேணும் என்றால் மொகத்தை ரொம்ப அப்பாவியாக வைத்துக்கொண்டு வளர்த்த நாய் முகத்தைப் பார்ப்பது போல மனிசியை பார்கணும்.ஆனால் ஆனால் அவர்கள் எங்களை பார்த்து இருப்பாங்கள்.ஆனால் நாங்கள் பள்ளி எழுந்து விட்டோம் என்று தெரியாத மாதிரியே ஒரு ஆக்ரிவேசன் நடக்கும்.
“டேய் சத்தம் போடதீங்கடா அப்பா நித்திரையல்லாவா” என்று ஒரு வித்தியாசமான குரலில் பேசுவாங்கள்.
நான் 100வீதம் அடிச்சு சொல்லுவினுங்கோ
இந்த பொண்டாட்டடிகளிடம் 1000 சொச்சம் சிவாஜி கணேசன் ஒளிச்சு இருக்கிறாங்கள்.இது ஒவ்வொரு கணவன் மாருடைய மனச்சாட்சிக்கும் தெரியும்.
இவ்வளவு சல்லடைகளுக்கும் பிறகும் ரீ கேட்கிறத்துக்கு ஒரு ரெக்கிணிகல் இருக்கு.மனிசி கொஞ்சம் பிள்ளைகளோடு கொஞ்சி பேசுகிற மாதிரி சத்தம் வந்தால்
அது தான் ரைம் தவற விடதே என உள் மனம் எச்சரிக்கும்.
என்றாலும் உள்ளே இருந்து திணறிய மனசு வார்த்தையை வெளியே கொண்டு வர முன்பு சின்ன இருமலை அல்லது ஒரு செருமலை கொண்டு வரும்அதனுடைய அர்த்தம் கூட
“இந்த நேரத்தில் நான் கேட்பது தவறு தான் என் பாவங்களை மன்னித்து எனக்கு ஒரு ரீ தந்து உதவுங்கள்” என்ற தொனி தான்.
எப்பவுமே அந்த இருமல் தான் அவங்களை கோபப் படுத்துதோ தெரியவில்லை.
பொல பொல எனக் பாத்திரங்கள் கொட்டுவது போல ஒரு சத்தம் வரும்
எமது கருணை மனுவை நிரகரித்த ஜனதிபதியின் புன்சிரிப்புப் போல அந்த சத்தம் எனக்குப்படும்
இவ்வளவு அவமாங்களுக்கு பின்னாலும் ஒரு ரீ குடிக்கனுமா என்ற தத்துவ விசாரங்கள் பழையபடி எமக்கு தோணும் .
“என்னுடைய பொண்டாட்டி நல்லவங்களா கெட்டவங்களா” என்ற ஒரு மனப்போரட்டமே நடக்கும் என்னுடை அபிப்பிராய படி இந்த நேர விசாரணை தான் பல பேரை சாமியராக்கி இருக்கிறது
அது என்னவோ தெரியாது என்ன மாயமோ தெரியாது காலையில் பொண்டாட்டி தார ரீ யுக்கு ஒரு எனோர்ஐp இருக்கின்றது .சில வேளை ரொம்ப கஸ்டப்பட்டு மன அழுத்ததுக்கு பிறகு கிடைக்கிற பானம் என்ற படியால் அதற்க்கு அந்த மவுசோ தெரியவில்லை

1 கருத்து:

படியுங்கள் படித்தபின் ஏதாவது சொல்லுங்கள்