வியாழன், 28 மார்ச், 2013

மரணம்

                மரணம்        
நீங்கள் சாவுரவர்களை பக்கத்தில் இருந்து பார்த்து இருக்கிறிங்களா?
உங்களோடு நீண்ட உரையாடல் செய்தவன் அடுத்த சில நிமிடம்களில் செத்து போனதை பார்த்து இருக்கிறிங்களா?
உங்களுக்கு பக்கத்தில் ஒருவன் நல்ல திடகாத்திரமானவன்,எந்த நோயியும் நொடியும் இல்லாதவன் இன்னும் சரியாக ஐந்து நிமிடத்தில் சாகப்போறான் ஆனால் உங்களால் அவனை எப்படியும் காப்பாற்ற முடியாது .அந்த நிமிடங்களை நீங்கள் அநுபவித்து உள்ளீர்களா?
உங்களுக்கு முன்னால் ஓடி வந்த ஒரு உயிர் ஒன்று அடிபட்டு சாக கிடக்கிறது அவர்களை எந்த வகையிலும் காப்பாற்ற முயற்சி செய்யாமல் நீங்கள் உங்கள் உயிரை காப்பாற்றி கொண்டு ஓடி இருக்கிறிங்களா?
எதாவது நடுச்சாமத்தில் எழும்பி உங்கள் உயிர் இருக்கிறதா என நீங்கள் உங்களை செல்வ் செக்கப் பண்ணிணிங்களா?

எனக்கு அதிர்சியை ஏற்படுத்திய முதல் மரணம்
அக்காவின் மரணம்
அவங்கள் எனக்க சித்தி தான்.அம்மாவின் தங்கச்சி.இன்னை வரைக்கும் அவங்கள் என்னில் வைச்ச பாசம் பிரமிக்க வைக்கிற அளவு இருக்கறது.என்னால் நல்லாக சொல்ல முடியும் இன்னை வரைக்கம் அவங்கள் ஒர் அதிசயமான அழகை கொண்டிருந்தாங்கள்.
மற்றது குமார் அண்ணாவின் மரணம் நாங்கள் அவரை சின்ன மாமா எனக் கூறுவோம்.
    malathi balachandran என்பவருடைய அண்ணா அவருடைய வாழ்கையை அவர் சின்ன பையங்கள் எங்களுக்காவே செலவழித்தார்.பாலசுப்பு என்பவருடைய தோட்டத்தில் நாள் முழுக்க தண்ணி கட்டுவார்.அதற்க்கு கூலியாக அவர் வேண்டுவது அந்த தோட்டத்தில் உள்ள தண்ணித் தொட்டியில் புள்ளாக தண்ணியை நிரப்பி விட்டு எங்களை அதற்க்குள் இறக்கி நீச்சல் பழக்கிறது.நாளெல்லாம் தண்ணிக்குள் கிடப்போம் அவர் தோட்டத்துக்குள்ளே தண்ணி கட்டும் போது நாங்கள் எல்லாம் தோட்ட வரம்புகளில் விளையாடுவோம். எப்ப அவர் தண்ணி கட்டி முடிப்பார் என ஆவலோடு காத்துக்கிடப்போம்.அந்த நேரத்தில் எல்லாம் ஏதாவது சாப்பிட தந்து கொண்டே இருப்பார்.பெரும்பாலும் அவர் சாப்பிட தருவது பனம் பிணட்டுத்தான்.அவருடைய அம்மா போடுற பிணாட்டை பாயோடு சுருட்டி சுட்டு எங்களுக்க தருவார்.நல்ல சுரள் தலைமயிர் என்னுடைய பார்வைக்கு சின்னமாமா நடிகர் விஜய் போல இருப்பார்.வாய்கல் வரம்பு தோட்டம் எல்லாம் அவரோடு அலைவோம்.
நிறைய சினிமா படம் பார்ப்பார்.எல்லா படக்கதையும் எங்களை இருத்தி வைச்சு சொல்லுவார்.நான் இன்னைக்கு யோசிக்கின்றேன்.நிச்சயமாக அவருக்கு ஒர தாய் உள்ளம் இருந்த இருக்கிறது.
நிச்சயமாக அவர் இன்னைக்கு இருந்து இருந்த ஒரு பெரிய சமுக சேவகராக இருந்து இருப்பார்.
ரொம்ப சின்ன வயதிலே இறந்து விட்டார்.
இவை இரண்டும் என் கண்ணுக்குள் முன்னால் நடை பெறாத மரணம்.என்றாலும் ஆனாலும் சின்னம் சிறிய வயதில் அது பெரிய இழப்பை அளித்தது
மரணங்கள் எப்பவுமே கடந்து கொண்டு போய்க் கொண்டிருக்கிறது.ஆனாலும் விடாமல் அதை ஒவ்வொரு செக்கனும் நாம் துரத்திக்கொண்டே இருக்கின்றோம். 

எங்களுக்கு போரளிகள் என்றால் எப்பவுமே வியப்பு தான்.எங்கள் மரணம் எங்களுக்கு எப்படி வரும் எனத் தெரியாது.என்றாலும் எங்கள் கண்ணுக்கு முன்னால் நடைபெறும் அவல மரணங்கள் மரணத்தில் தீராத பயத்தை உண்டாக்கிறது.அந்த வகையில் சுகந்தி அக்காவின் மரணம் என் வாழ்கையில் தூங்காத இரவுகளை தந்து கொண்டே இருக்கிறது.

சுகந்தியக்கா ஒரு ஆண் மாதிரி தோட்டத்துக்குள் நின்று முறிவா...அப்போது அவங்களுக்கு ஒரு பதினெட்டு வயதிருக்கும்
அவங்க அப்பாவை ராசு மாமா என்பேன்.அவங்கள் அம்மாவை ராசு மாமி என்பேன்.அவங்களை ஏனோ சுகந்தியக்கா எனத்தான் கூப்பிடுவேன்.
இதுவும் ஒரு இடம் பெயர்வில் நடந்த சம்பவம் தான் சுகந்தியக்கா உரும்பிராயில் இருந்தவா...நாங்கள் மட்டுவிலில் இருந்தனான்.கடைசி நேரத்தில் நாங்கள் எங்கள் துணிமணிகளை எங்க பெரியம்மா வீட்டை கொண்டு வந்து வைச்சிருந்தோம்.பெரியம்மா வீட்டுக்கு முன்னுலேயே சுகந்தியக்கா வீடு இருந்ததது.
ஆமிக்காரன் எங்க ஏரியா புல்லாக வருவதற்க்கு முன்னம் கொஞ்ச உடுப்பும்,கொஞ்சம் சமயல் பாத்திரங்களும் எடுக்கிற ஜடியாவில் நான்,ராசா இருவரும் வீட்டுக்கு அம்மா ஆச்சியாக்களுக்கு சொல்லாமல் மட்டுவிலில் இருந்து வெளிக்கிட்டோம். திடிரென செல்ல அடித்த படியால் எல்லாரும் அந்ததை அந்த இடத்தில் விட்டு ஓடி வந்தவர்கள் தான்.அதனால் எல்லர்ரக்கும் திரும்ப போய் அதி முக்கியமான பொருட்களை எடுக்கிற தேவை இருந்ததது

எல்லா குடும்பமும் இப்படி கொஞ்ச கொஞ்சம் சாமங்களை எடுப்பதற்க்கு வந்து இருந்தார்கள்.அதில் சுகந்தியக்காவின் குடும்பமும் ஒன்று.
நான் வீட்டுக்குள் போய் கொஞ்ச பொருட்களை எடத்துக் உரப்பையில் கட்டிக்கொண்டு இருந்தேன்.
ருhச அவனுடைய கோழி முட்டைகளை எடுக்க எங்க வீட்டு கோடிக்கை போனவன் .
திடிரென ஓடி எந்து “ரவி ஆமியடா”என்று கத்திவிட்டு சுகந்தியக்கா வீட்டு வேலிக்குள்ளாக புகுந்து தன்றை விட்டு வேலிக்குள்ளாலை புகுந்து ஓடத் தொடங்கி விட்டான்.
நான் சுகந்தியக்காவின் வேலிக்குள் புகுந்து விட்டேன்.அனால் ராசா வீட்டுக்குள்ளால் என்னால் புக முடியாது என என்னால் பார்தத உடனே விளங்கி விட்டது.அதனால் நான் சுகந்தியக்கவின் முற்றத்துக்கு ஓடி வந்தேன் சகந்தியக்கா முற்றத்தில் இருந்து கிணத்தக்கள் விடற பெறிய பைப்பை தோளில் தூக்கி கொண்டு நிக்கிறா
சுகந்தியக்கா ஆமியுங்கோ ஓடுங்கோ எனச் சொல்லி விட்டு  நான் அவங்க வீட்டக்க பக்கத்து றோட்டாலை ஓடிக்கொண்டிருந்தேன்..
ஒரு மைல் ஓடியிக்க மாட்டோம் ஆமிக்காரன் செல்லடிக்க தொடங்கி விட்டான் .
இயக்கம் ஏற்கனவே எங்க ஊரில் அங்காங்கு பங்கர் வெட்டி வைச்சுருதவங்கள்
செல்லு குத்துற நேரத்தில் பங்கருக்குள் படுத்து விட்டு அந்த செல்லு வெடித்த உடன் ஒடிபோய் நாங்கள் அடுத்த பங்கருக்குள் போகிற நேரத்தில் அடுத்த செல்லு குத்துற ரைம் சரியாக இருக்கும்.
நூன் ஒரு பங்கரக்குள் போய் படுத்த விட்டேன் சரியாக அந்த நேரத்தில் சகந்தியக்கா முன்னால் ஓடி; போய்க்கொண்டிருந்தா.
நான் கத்தினேன் சுகந்தியக்கா செல்லு குத்திட்டான் படுங்கோ படுங்கோ என...
சுகந்தியக்கா என்னை திரம்பி பார்த்தா
ஆவங்கள் கையில் கிணத்து பம்பு சுற்றிய வயைத்தின் நடுத் தடி இருக்கிறது.
ஆவங்கள் அந்த நிமிசத்தில் அந்த தண்ணீர் பம்புவோடு எப்படி பங்கருக்குள் குதிக்கிது என யோசித்தவோ...அல்லது செல்லு தூரத்தில் தான் விழுகிறது என நினைத்தாவோ?
ஆவங்க மனசில் என்ன நினைத்தாய்கள் எனத் தெரியவில்லை.
செல்லு விழ விழ அவங்கள் ஓடிக்கொண்டே இருந்தாங்கள்.
ஏன் பங்கருக்குள் இருந்து ஒரு முப்பது மீற்றர் போய் இருக்க மாட்டங்கள்.

ஆவங்கள் சளாரென பைப்பை போட்டு விட்டு படுத்து விட்டாங்கள்.
நான் அப்படி தான் நினைத்தேன்.
குத்தின செல்லு எல்லாம் விழுந்து விட்டத என்ற என்னுடைய கணக்கின் படி நான் இன்னும் 100 மீற்றருக்க அப்பால் அடுத்த பங்கருக்கு ஓடுறத்துக்கு ரெடியாகி ஓடிக்கொண்டிருந்தேன்.
ஓடிய படி நான் சுகந்தியக்கா படுத்து இடத்துக்கு வந்து விட்டேன்
சுகந்தியக்கா தலையால் இரத்தம் வடிந்து சீறிக்கொண்டிருந்துதது.
அது கிட்டதட்ட ஊசிக்குழாயால் பிரிட்டு கொண்டு வந்ததுது போல இருந்தது
அவங்கள் திணறிக் கொண்டிருந்தாங்கள்.அவங்கள் முகம் எல்லாம் மண்; தூசி
அவங்கள் முடியாமையால் ஒற்றைக்கையால் புல்லை இறுக இழுத்துக்கொண்டிருந்தா
அவங்கள் மூச்சு விட கஸ்டப்பட்டு கொண்டிருந்தாங்கள்.
மிக மெதுவாக சுத்தும் பம்பரம் போல சுகந்தியக்கா கண் முழி ஓடிக்கொண்டிருந்தது

இதை பார்த்து விட்டும் நான் என்னூயிரை காப்பாற்ற ஓடிக்கொண்டே இருந்தேன்.
அவங்கள் கடைசி நமிடங்கள் இப்பவும் என் கண் முன்னால் ஒடிக்கொண்டே இருக்கிறது.
நூன் இதை எழுதும் போது யோசிக்கின்றேன்.
சுகந்தியக்கா அந்த கடைசி நிமிடத்தில் என்னை அடையாளம் கண்டு இருப்பாங்களா?
தூன் சாகப்போறது அவாக்கு தெரிஞ்சு இருக்குமா?
ஆந்த கடைசி நிமிடத்தில் என்னிடம் ஏதாவது உதவி எதிர் பார்த்து இருப்பாங்களா?
நூன் அந்த நிமிடத்தில் சுகந்தியக்கவுக்கு உதவி பண்ணியிருக்க முடியுமா?

ஒரு உயிர் போறதை பக்கத்தில் இருந்து பாக்காதீர்கள். அந்த நிகழ்வு காலம் பூராய் எங்கள் நினைவு கனவு எல்லாத்திலும் வந்து துரத்தும்.

அது ஒரு  கொடுமை
(தொடரும் மரண சாட்சி.........)




;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படியுங்கள் படித்தபின் ஏதாவது சொல்லுங்கள்