வியாழன், 28 மார்ச், 2013

ராணி காமிக்ஸ்

ராணி காமிக்ஸ்


சின்ன வயதை சுவரசியப்படுத்தியதில் ராணி காமிக்ஸ் புத்தகம் நிறைய பங்கு ஆற்றியது.அந்த புத்தகதின் வாசம் இன்னும் மூக்கை விட்டு நகரவில்லை.படிக்கும் போதே ஒரு கற்பனை உலகத்தில் நான் ஓடி போய் விடுவேன்.அந்த உலகத்தில் நான் தான் ராஜா.
ாணி காமிக்ஸ் புத்தாகத்தை எனக்கு அறிமுகப் படுத்தியது ஞானன் என்ற நண்பன்.அந்த வயதில் அவன் எனக்கு அரசனாக இருந்தான்.ஒரு நாளைக்கு ஒரு புத்தாகம் தான் தருவான்.இரவு முழுக்க எப்போது விடியும் என பார்பேன்.பாடசாலை போகும் போது அவன் வீட்டை போய் படித்த புத்தகதை;தை கொடுத்து விட்டு புது புத்தாகம் வேண்டுவேன்.புது புத்தாகத்தை கையில் வேண்டும் போது நெஞ்சில் ஒரு குளிர்ச்சி வரும்.என் வாழ்க்கையில் எத்தனையோ வாய்ப்புக்ள் சந்தோசங்கள் எனக்கு கிடைத்தது.அனால் அந்த நிமிடம் கொடுத்த சந்தோசம் போல என எதுவும் இல்லை.
நல்ல நண்பரக்ளை எனக்கு ராணிக்காமிக்ஸ் கொடுத்தது.இன்றை வரைக்கும் அந்த நண்பர்களை நான் தேடுகின்றேன்.என் நண்பண் ஞானனை ரொம்ப கஸ்டப்பட்டு இதே குயஉநடிழழம கண்டுபிடித்தேன்.நான் அவனுக்கு ஒரு பழைய ஞாபகத்தை சொல்லி என்னைத் தெரியுமா எனக் கேட்டேன்.என்றாலும் அவன் என்னைத் தெரியாது மன்னிக்னும் எனக் கூறி விட்டான் .ஒரு 10 நாளாக எனக்கு ஏதோ பெரிதாக இழந்த கவலை ஏற்ப்பட்டது.இன்றைய ஈழத்துகாரர் உள்ள மேலைத்தேயம்,பொருளாதார எற்ற இறக்கங்கள் சிந்தனையில் அவன் என்னைத் தெரியாது என சொல்லி விட்டானோ என நான் கவலைப்பட்டேன்.அவனுக்கு என்னை ஞாபகப்படுத்தி வைத்திருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.எனக்கும் அவனுக்கும் ராணிக் காமிக்ஸ் என்ற புத்தகம் ஒரு பாலம்,இரத்த உறவு என நான் நம்பினேன்.நான் என் ஆயுள் வரைக்கும் அவனோடு நட்புறவை கொண்டு செல்ல இது போதுமானது என்பது என் உளவியல் வாதம்.
இந்த ராணிக்காமிக்ஸ் புத்தாக கொடுக்கல் வாங்கலில் நிறைய நண்பர்களையும் இழந்து இருக்கின்றேன்.வேண்டின புத்தாகத்தை தராதவர்கள் என் தேசத்தேயே தர மறுத்தவராக நான் அந்த வயதில் நினைத்தேன்.
ராணிக்காமிக்ஸ் புத்தாகத்தினால் சண்டை போட்டவரில் முக்கியமானவர் ஒருவர் தாசண்ணா.ராணிக்காமிக்ஸ் புத்தகத்துக்கும் எனக்கும் அவருக்கும் உள்ள உறவு அலாதியாது.இரண்ட பேரும் பங்காக புத்தாகம் சேர்த்தோம் ஏதோ பிரிக்கிற பிரச்சனையில் இரண்டு பேருக்கும் ஏதோ முரண்பாடு என்னவென்று ஞாபகம் இல்லை.ஆனால் பெரிசாக சண்டை போட்டோம்.அதோடு இரண்ட பெரும் கதைக்கமாமல் விட்டு விட்டோம்.லண்டனுக்கு போன கையோடு அவரை தேடி நட்பை புதுப்பித்து கொண்டேன்.அவர் பழைய ஞாபங்களை சொல்லி பேசிக்கொண்டோம்.அதில் அதிகம் பேசப்பட்டது ராணிக்காமிக்ஸ் பற்றி என நினைக்கிறேன்.அவ்வளவுக்கு ராணிக்காமிக்ஸ் வாழ்க்கையில ஒன்றாகி விட்டது.
அப்புறம் என்னை ஸ்கொட்லாண்ட் ஜெயிலில் திருப்பி அனுப்புறத்துக்கு லண்டண் இமிக்கிறசேனால் வைத்திருந்த போது .எனக்கு கோர்ட் இல் வக்கில் வைத்து வாதடி வெளியே எடுப்பதற்க்கான முழுப்பணமும் தாசண்ணா தான் கொடுத்தார்.அதில் முழுப்பணமும் நான் இன்னும் கொடுக்கவில்லை.என்னை நம்பி அவ்வளவு பணத்தை தருவதற்க்கு ராணிக்காமிக்ஸ் தான் அடித்தளம் இட்டது என்பது உண்மை.
இன்றை வரைக்கும் ஏழாலை மாக வித்தியலத்தில் படித்த பிரசாந்தன் என்ற நண்பனை நான் தேடிக்கொண்டு தான் இருக்கின்றேன்.யாழ்ப்பாண சந்து பொந்து எல்லாம் ராணிக்கமிக்ஸ் புத்தாகத்துக்காக நாங்கள் அலைந்தோம்.
நான் நினைக்கிறேன் ராணிக்காமிக்ஸ் முதல் புத்தகம் பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர்,இரண்டாவது புத்தகம் தப்பி ஓடிய இளவரசி,மூன்றாவது புத்தாகம் அழகியைத் தேடி என இப்படியாக தங்க துப்பாக்கி என்ற ராணிக் காமிக்ஸ் தவிர்த்து வரிசையாக எல்லா புத்தாகமும் என்னிடம் இருந்தது.இது நானும் பிரசாந்தனும் தேடி தேடி வாங்கின புத்தகம் அவனின் சைக்கிலில் தான் அலைஞ்சோம்.கடைசியல் 1996 ஆண்டு கொழும்பில் இருந்து கூட எனக்கு கடிதம் போட்டான்.நெடுங்கேணி இடம் பெயர்வில் நான் அவன் தொடர்பை தவற விட்டு விட்டேன்.
ராணிக்காமிகஸ்க்கு பிறகு ராஜேஸ்க்குமார்,பட்டுக்கோட்டை பிரபாகர் அடுத்து சாண்டியன்,கல்கி,டேனியல்,செங்கை அழியான் அப்புறம் சுஜாதா,எண்டமுறி, தொடர்ந்து ராமகிருஸ்ணன்,ஜெயமோகன்,சோப சக்தி,; ,அருளினியன் நாஞ்சில நாடன்,முத்துலிங்கம்,கல்யாண் சாகர் நிப்பாணி எனத் தளம் மாறி போனலும் ராணிக்காமிக்ஸ் தந்த புத்துணர்வு மற்ற புத்தாகம் எனக்கு ஊடாக வரவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படியுங்கள் படித்தபின் ஏதாவது சொல்லுங்கள்