வியாழன், 28 மார்ச், 2013

கன்னிமார் கோயிலடியும் நாங்களும்

காலம் பூராய் துரத்திக்கொண்டு இருக்கிற இனிமையான நினைவுகளில் கன்னீமார் கோயில் ஒன்று.கன்னிமார் என்பது ஒரு குல தெய்வம் என்ற ஒன்றக் சொல்லுக்குள்ளே என்னால் கடசிவரை அடக்க முடியாது.கன்னிமார் என்பது தாயக,நண்பியாக ,நண்பணாக,மற்றும் ஒரு ஜீரோ என சகல பாத்திரத்துக்கும் அடங்கி நிற்க்கும் ஒரு தெய்வம்.என்னுடைய மண்வாசனையே அங்கே இருந்து தான் ஆரம்பிக்கிறது.
கன்னீமார் கோயிலை சுத்திதான் எமது விளையாட்டுக்களே ஆரம்பித்தது.எனக்கு தெரிந்த முதல் ஞாபகம் குமார் அண்ணா பஞ்சண்ணா நடத்திய விளையாட்டு போட்டி.கிளியக்கவின் குமார் அண்ணா,மகேசக்காவின் பஞ்சண்ணா,மோகண்ணா,உலகநாதண்ணா,யோகமக்கவின் சிவாண்ணா,அப்பண்ணா, மட்டுவில் குமாரண்ணா என அந்த நேரத்து இளந்தாரிகள் கடைசியாக ஒரு விளையாட்டு போட்டி வைத்தார்கள்.பிறகு ஒவ்வொருவராக வெளிநாடு கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.
ஆதற்க்கு பிறகு நாதன் மாமா நித்தியண்ணா ஆட்கள் கன்னிமாரில் உள்ள வாசிகசாலையில நாடகங்கள் போட தொடங்கினார்கள்.ஒவ்வொரு சிவராத்திரியும் களை கட்டும்.
எனக்கு ஞாபகம் சிரிக்கும் சிலைகள் நாகடகம்.அதை விட கல்பணாக்கா,தயாக்கா,யமுணாக்க,கூட சில நாடகத்தில் நடித்த ஞாபகம்.சிவ ராத்திரி..என்பது அவ்வளவு சாதரணமாக நாளாக போகது ..அண்ணைக்கு ரொம்ப சாதரணமாக ஊருலை இருக்கற தெண்னையில் எல்லாம் கள்ள இளநீர் பறிச்சு குடிப்போம்.நான் இருந்த காலம் வரைக்கும் இளநீர் பிடுங்கி விட்டான் என்று யாரும் யாருடமும் முறையீடு செய்தது இல்லை.சிவராத்திரியில் நிச்சியமாக குப்பிழானில் இரண்டு காதல் ஜோடியாவது ஓடி விடும்.
கன்னிமார் கோயிலை சுத்தி மாலையில் ஒரே விளையாட்டுத்தான்.கிட்டியடி,போலையடி,யாட்டு விளையாட்டு.வருசம் பூராய் நடக்கும்.
எனக்கு பதினாறு வயது வரைக்கும் அங்கே தான் இருந்தேன். கோயிலில் ஒரு பொங்கலை நாங்கள் தவற விட்டது இல்லை.யாரவது பொங்கினால் அந்த ஊரில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்து விடுவோம்.பூசையெல்லாம் முடிய அப்படியே எல்லோரும் வரிசையில் இருப்போம்.ஆறு மீற்றர் நீளத்துக்கு கிட்டத்தட்ட ஆறு வரிசை இருக்கும்.அதை விட இருக்க இடம் இல்லாவர்கள் கொஞ்ச பேர் நின்று பொங்கல் வேண்டுவார்கள்.பெரும்பாலும் உவ்வொரு வெள்ளீயும் பொங்கல் நடக்கும் என நினைக்கின்றேன்.அதோடு கோயிலுக்கு கொடுக்கிற இளநீர் தேங்காய்க்கு நாங்கள் அடிபடுவோம்.அது அலாதியான சந்தோசம்.எங்க கன்னிமார் கோயிலடியில் இருந்து பார்த்தல் வீரமனை சகல பக்கமும் தெரியும்.நானும் தாசண்ணாவும் இன்னொரு படி போய் பககத்தில் உள்ள வேப்ப மர உச்சியில் எறி வேப்பம் பழம் சாப்பிட்டுக்கொண்டே இன்னும் அதிகமாக எங்க ஊரை கண்காணிப்போம்.அதில் ஒரு அலாதியான சந்தோசம் இருந்தது.
இதை விட முக்கியமாக நாங்க வளர வளர படம் பார்கின்ற ஆசையும் வளர்தது.ஊரில் இருக்கிற எல்லாரிடமும் ஒரு கிளிஞ்ச கொப்பியலில் பெயர் எழுதி காசு கேட்போம்.முந்தி கரண்ட இல்லாத படியால் ஜெனேற்றர் தான் அதனால் காசு தர முடியாதவர்கள் மண்ணெண்ணை தருமாறு கேட்போம்.அனைகமாக ஆட்கள் பணம் தருவார்கள்.சில வேளை ஏசி கலைச்சு விடுவார்கள். நான் நினைக்pன்றேன் அப்ப ஆயிரம் ரூபாய் ரீவி,டெக்,ஜெனேற்றர்,அதோடு நாழு பட கொப்பியும் கொண்டு வருவார்கள்.எப்படியும் ஆயிரம் ரூபாய் சேராது.நானுறு ரூபாய் கிட்டதட்ட குறையும் .ஜிம்மி அக்காவிடம் போய் அழுகிற மாதிரி கதைச்ச எட்டுதிட்டி மாயம் கொட்டாதே என சொல்லி விட்டு மிச்ச காசு எல்லாம் தருவா...
சிவராத்திரிக்கு இப்படித்தான் காசு சேர்த்து; ரீவிக்கு சொல்லி காசையும் கொடுத்து விட்டோம்.அவரும் சரியாய் ஆறு மணிக்கு ரீவி எல்லாத்தையும் கொண்ட வந்து போட்டால் ரீவி வேலை செய்ய வில்லை.முந்தி ரீவியோடு நாலஞ்சு பொடிகாட்டும் வருவினம்.ரீவிக்கு ஒருத்தர்.டெக்குக்கு ஒருத்தர்.ரீமோட்டுக்கு ஒருத்தர்.எல்லாரும் ரீவியை சுத்தி நின்று வேலை செய்தும் ரீவி வோர்க் பண்ணவில்லை.அப்படியே ரீவியை விட்டு விட்டு அடுத்த நாள் வாரேம் என பொடிக்காடுகளை விட்டு விடடு ரீவி முதலாலி போய்விட்டார்.நானும் ரூபண்ணாவும் மெல்ல ரீவியுடைய மேலே போர்தியிருந்த துணியை விலக்கி பார்தால் கார்ட் போரட் பெட்டியில் ரீவியினுடைய முன் கண்ணாடியை செருகி ரீவி போல செய்து கொண்டு வந்து இருக்கினம்
ஏன் என்றால் சிவராத்திரிக்கு எல்லா கோயிலிலும் ரீவி ஓடர் எடுப்பாங்கள்.ரீவி முதலாலியடம் வேறு ரீ வி இல்லை.அதனால் நாங்கள் சின்னபொடியல் தானே என எமாத்துவோம் என கொண்டு வந்தார்கள்
பேந்து அடுத்த நாள் படம் போட்டு காட்டினார்கள அது வேறை விசயம்;.
முந்தி கன்னீமார் கோயில் எப்போதும் களைகட்டிய படியே இருக்கும்.நான் லண்டணை விட்டு ஊருக்கு போய் இருந்த சமயம் கன்னீமார் கோயிலை நல்ல பெரிசாக கட்டி இருந்தார்கள்.என்றாலும் முந்தி இருந்து சந்தோசம் இப்ப இல்லை மாதிரி எனக்கு பட்டது.கோயிலில் பொங்கி கொண்டு சனத்தை பார்தால் சனமே இல்லை...என்னம்மா யாரையும் காணவில்லை என அம்மாவிடம் கேட்டேன்.
நான் போய் எல்லருக்கும் சொல்லி போட்டு வாரேன் என்று அம்மா சொன்னா
ஏனம்மா கோயிலில் பொங்கினால் ஆட்களுக்கு சொல்லனும் எனக் கேட்டேன்
அது அப்படி தான்ட என அம்மா சொன்ன
முந்தி எல்லாம் அப்படி இல்லையே என நான் கேட்டேன்
முந்திய மாதிரி இப்ப இல்லையட என அம்மா சொன்ன...
அந்த வார்த்தையை கேட்டவுடன் எனக்கும் இந்த சமுதாயத்துக்கும் இடையில் ஏதோ நூல் பட்டென்று அறுந்தது போல இருந்தது.

முந்தி ரொம்ப கஸ்டம் எங்க ஊரிலே ஆனால் எல்லோரும் ரொம்ப சந்தோசமாக இருந்தோம்
முந்திய மாதிரி இல்லை என்ற அம்மாவின் கருத்தின் எதிர் பக்கம்
முந்திய மாதிரி கஸ்டமும் இல்லை அதே நேரம் முந்தைய மாதிரி சந்தோசமும் இல்லை
என்பது தானே

தொடரும்

1 கருத்து:

படியுங்கள் படித்தபின் ஏதாவது சொல்லுங்கள்