வியாழன், 28 மார்ச், 2013

ஆமி

                        
   
பால்யம்

ஆமிக்கதைகளில் கழிந்தன..

இரவின் கனவுளில் ஆமிகளின் பாதணி சத்தங்களில் ஓடி ஒளிவது ஒரு பெரிய கஸ்டாமகவே இருந்தது.

கால்களை தூக்கி வீசி தலையை சுவரில் அடித்துவிடுவார்கள்.என்ற பயத்தில் கால்களை மடக்கி போர்வையால் மூடிப் படுத்தேன்

ஒரு இரும்புத் தலையின் கீழ் அவர்கள் முகம்கள் நிழலாக ஒளிந்து இருக்கும் என்று எனக்கு சொல்லப்பட்டது.

ஆமிகள் இரவுகளின் சாயலாக நான் கணக்கிட்டு இருந்தேன்

பகல்ளை விட இரவுகள் மிக நீண்டதாகவே எப்பவும் இருந்தது.

இரவுகள் என்னை உற்றுப்பார்கின்றது என்ற பயத்தில்

சாம இரவுகளில் நான் விறைத்து படுத்து இருந்தேன்

ஆமிப் பய இரவுகள்

ஆமியை விட பயங்கரமானவை





எப்பவும் நடுசாமங்களில் எழும்பி அம்மா என்னை இழுத்துக்கொண்டு ஒடுவாங்கள்.அடுத்த தெரு ஓடும் போது ஆச்சி எமக்காக காத்து இருப்பாங்கள் அவங்க கையில் ஒரு கருத்த பாக் இருக்கும்.அம்மா எப்பவும் பாயையும் சுருட்டி கொண்டு வருவா.என்றை தலையில் எப்பவும் சூக்கேஸ் இருக்கும்.கொஞ்ச தூரம் போனல் பெரியம்மா,பெரியப்பா தெய்வத்தான் எங்களுக்கா காத்தக் கொண்டு இருப்பார்கள்.இதெல்லாம் செல்லடிக்கும் நேரத்திலும் கெலிகெப்டர் வந்து குண்டு போடுற நேரத்திலும் சாதரணமாக நடக்கும்.மாதத்தில் எப்படியும் 10 நாள் பரதேசி போல இரவெல்லாம் யாரவது விட்டுக்கு வெளியே முடங்கி படுத்து இருக்கின்றோம்.ஒரு இனம் புரியாத பயம் மனசுக்குள்ளே அடித்துக் கொண்டிருயிருக்கும்.

அடுத்த நாள் விடியவும் வந்து நானும் என் சார்ந்த பையன்களும் கெலி அடித்த இடங்களில் எல்லாம் சன்னக்கோதுகளை தேடி எடுப்போம்.

சன்னக்கோதுகளை வைத்து நாங்கள் போலை போல் அடித்து விளையாடுவோம்.

அப்புறம் நாங்கள் ஆமியும்,இயக்கமும் விளையாடுவோம்



இரவில் நான் ஆமிக்கு ஏன் பயந்தேன் என்று இன்று வரைக்கும் நான் யாருக்கும் சொல்லவில்லை அதன் உண்மை எனக்கு எப்போதோ தெரியும்

அது ஆமி வந்து என்னை சுடடுட்டு அம்மாவை கற்பழித்து விடுவானோ என்ற எண்ணத்தில் ஏற்ப்பட்ட பயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படியுங்கள் படித்தபின் ஏதாவது சொல்லுங்கள்