வியாழன், 28 மார்ச், 2013


வேலாயுதம் மாஸ்ரர்.

  இன்னைக்கு விஐய் ரீவியில் சாட்டை படம் பார்த்தேன.; மறக்க முடியாத ஆசிரியர்கள் நிழல் போல் வாழ்க்கை எல்லாம் வந்த கொண்டு இருப்பார்கள்.அவர்கள் கட்டாயமாக ஒவ்வொரு மாணவனின் வாழ்கையிலும் ஒரு மாற்றத்தை கொண்டு வருவார்கள்.
எமது பாடசாலையான குப்பிழான் விக்கினேஸ்வரவுக்கு தலைமை ஆசிரியாராக இருக்கும் வரை தன்னை வருத்தி உழைத்தவர் வேலாயுதம் மாஸ்ரர்.
ஒர் தவிர்கமுடியாத காலகட்டத்தில் விக்கினேஸவரா பாடசாலை தன்னை தானே அழித்துக் கொண்டு இருந்தது. தொண்ணூற்றி ஓன்றாம் (1991)ஆண்டு யாழ்பாணத்தில் குரும்பசிட்டி,உறங்குணை, வரை இலங்கை இராணுவம் கைப்பற்றிய போது எமது பாடசாலை மயிலங்காட்டில் உள்ள சிறி முருகன் பாடசாலையில் ஒரு இடம் கேட்டு ஒதுங்கி காலையில் சிறி முருகன் பாடசாலையும் விக்கினேஸ்வர மாலையிலும் பாடசாலை நடத்தி கொண்டு இருந்தார்கள்.அந்த நேரத்தில் எமது பாடசாலையில் அதிபர் என்று யாரோ இருந்தார். நாங்கள் அவரை கண்ணால் கூட கண்டதில்லை.
அப்போது எமது விக்கினேஸ்வர பாடசாலையில் மாணவர்களைவிட பெற்றோர்களின் கியு அதிகமாக இருக்கும்.அது பிள்ளைகளை இன்னொரு பாடசாலைக்கு மாற்ற படையெடுக்கும் பெற்றோர்கள்.பெரும்பாலும் வசாவிளான் பள்ளிக்குடத்துக்கே அந்த பிள்ளைகள் மாற்றப்பட்டார்கள்.அது ஒரு மோகம் மட்டுமல்ல அங்கு படிப்பிக்கிற ஆசிரியர்களே தம் பிள்ளைகளை இன்னொரு பள்ளிக்குடத்துக்கு அனுப்பும் போது மற்ற பிள்ளைகளின் தாய் தகப்பனை குற்றம் சொல்ல முடியாது. பெரும்பாலும் விக்கினேஸ்வர பாடசாலையில் படிப்பித்த ஆசிரியர்கள் குப்பிழானை சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள்.அவர்கள் தம் பிள்ளைகளை வேறு பாடசாலைக்கு மாற்றக் காரணம் தாம் படிப்பிக்கின்ற முறையில் தமக்கே நம்பிக்கை இல்லாமை இருந்து இருக்கலாம் என்பது என் வலுவான நம்பிக்கை.சில வேளை சேட்பிக்கர் தர மறுத்த ஆசிரியரோடு பெற்றோர்கள் மேற் கூறப்பட்ட காரணத்தை கூறி சண்டை பிடித்ததையும் நான் கவனித்தேன்.இன்னொரு படி போய் சேட்பிக்கர் தர மறுத்த போது உண்ணவிரதம் இருந்த பெற்றேரையும் நான் அறிவேன்.
போர்,சனத்தொகை குறைவு,தளபாட தட்டுப்பாடு,சரியான பாடசாலை அமையாமை இதோடு மாணவ பற்றக்குறை போன்ற காரணத்ததால் குப்பிழான் விக்கினேஸ்வர நலிந்த கொண்டு வந்த காலம் அது.அப்போது நான் எட்டாம் ஆண்டு படித்தேன்.எனக்கு நல்ல ஞாபகம் .ஒரு 180 மாணவர்கள் தான் அப்போது படித்தார்கள்.இதில் முசுப்பாத்தி என்னவென்றால் ஐந்தாம் வகுப்பு வரை 150 மாணவர்களும் 5 வகுப்பில் இருந்து 10 வகுப்பு வரை 30 மாணவர்கள் தான்.அந்த சமயத்தில் தான் ஏழாலை மத்திய மாகா வித்தியாலயம் குப்பிழான் பாடசாலையை நிறுத்தி விட்டு ஏழாலை கொத்தணியோடு சேர்ப்பதற்றகான ஏற்பாட்டில் இரங்கியது.
அந்த நேரத்தில் தான் வந்தார் வேலாயுதம்; மாஸ்ரர் எங்கள் பாடசாலை அதிபாராக......
அவர் வந்த ஒரு கிழமையிலேயே ஒர பெரிய பிரச்சனை முடிவுக்கு வந்ததது.கொத்தணி பாடசலையில் இருந்து தற்காலிகமா குப்பிழான் பாடசாலையை நிறுத்துவதற்க்கான அடிப்படையில் பேசுவதற்க்கு ஒருத்தர் வந்தார் .
அது எப்படி சாத்தியம்,இப்ப இருக்கிற மாணவர்களை என்ன செய்வது? என வேலாயுதம் மாஸ்ரர் கேட்டார்.
மாணவர்கள் விரும்புகின்ற பாடசாலையில் அவர்களை சேர்க்கலாம்.அதிபர்,ஆசிரியர் ஒரு கடிதம் எழுதி தந்தால் அது சாத்தியம் என வந்தவர் சொன்னார்
அப்படி எல்லாம் எங்களால் கடிதம் எழுதி தர முடியாது.
அப்படி இல்லை உங்களுக்கு ஒரு பாடசாலை இல்லை சிறிமுருகன் பாடசாலையில் நீங்கள் மாலையில் நடத்தவது அவர்களுக்கு கஸ்டம் சிறி முருகன் பாடசாலை பாதிக்கபடுகின்றது.
என்பத அவரிகளின் வாதம்.
பரவாய் இல்லை இன்னும் 15 நாளில் நாங்கள் சிறி முருகன் பாடசாலையை விட்டு எமக்கு ஒரு பாடசாலையை உருவாக்கின்றோம்.என வேலாயுதம் மாஸ்ரர் சொன்னார்
உங்களுக்கு இன்னொரு பாடசாலை கட்டுவதற்க்கு பணம் ஒதுக்கிறளவுக்கு கொத்தனியிடம் வசதி இல்லை என்பது அவரின் வாதமாக இருந்தது.அந்த வாதம் ஓரளவுக்கு உண்மை


அப்படியென்றால் அந்த பிரச்சனையை நாங்கள் பார்க்கின்றோம்.என்று வேலாயுதம் மாஸ்ரர் கூறி விட்டார்.
மேலே கூறப்பட்ட உரையாடல்ளை எங்களுக்கு சொன்னது கண்ணா ரீச்சர்.இந்த இடத்தில் கண்ணா ரீச்சரை பற்றி சொல்லணும்.கண்ணா ரீச்சருக்கு குப்பிழான் பாடசாலையில் ஆதித பிரியம்.ஒவ்வொரு மாணவர்களையும் கண்ணா ரீச்சர் நேசித்தாங்கள்.பதினொன்றாம் வகுப்பு வரை நான் அவங்களிடம் தான் படித்;தேன்.நானும் யோசித்து பார்ப்பேன் கண்ணா ரீச்சார் படிப்பித்த காலத்தில் ஒரு நாள் கூட ஒரு சின்ன வார்த்தை கூட மாணவர்களையோ அல்லது மற்றவர்களையோ புண்படுகிற மாதிரி அவங்கள் பேசி பார்க்கவில்லை.எல்லாருக்கும் கிடைக்காத வாய்ப்பு எனக்குகிடைத்தது. இடம் பெயர்ந்த காலத்தில் நெடுங்கேணி மாகா வித்தியாலத்தில் நான் உயர்தரம் படிக்கும் போதும் கண்ணா ரீச்சர் அங்கே ரீச்சராக இருந்தாங்கள்.
புதினைந்த நாளில் புதிசாக பாடசாலை உருவாக்கின்றோம் என வேலாயுதம் மாஸ்ரர் சொன்னாலும் சொன்னார் அதற்க்கா அவர் பட்ட கஸ்டம் கொஞ்ச நஞ்சமல்லர்.குப்பிழானிலேயே ஒரு வீட்டை பிடித்தார்.அது பொன்மணிக்காவின் வீடு.அப்புறம் மாணவர்களை கொண்டு குப்பிழானையும் குப்பிழானை சுற்றியும் காசு சேர்த்தார்.அடுத்த சுற்றாக ஊரில் உள்ள கொஞ்சம் பணக்காரிடம் நேரடியாக ஆசிரிய குழுக்களோடு இணைந்து பணம் சேர்த்தார்.பொன்மணிக்கா உடைய காணி முழுவதும் நாழு பெரிய கொட்டில் போட்டு ஓலையாலே மேய்ஞ்சு பாடசாலையை ஆரம்பித்தார்.கூலிக்கு யாரையும் பிடிக்கவில்லை.மாணவர்களும் ஆசிரியருமே அதை செய்தோம்.அவர் பட்ட கஸ்டத்தை பாரத்து பொன்மணிக்கா மீண்டும் தன்னுடைய வீட்டில் பாதியை பாடசாலைக்கு கொடுத்தாங்கள்.அவங்களுக்கு நல்ல மனசு.
மாணவர்கள் வீட்டை போன பின்பும் வேலாயுதம் மாஸ்ரர் கயிறு வெட்டுறதும் ,கிடங்கு வெட்டுறதுமாக அடுத்து நாள் வேலைக்கு முதல் நாளே பிள்ளையார் சுழி போடுவார்.சில வேளை இரவ 12 மணி வரை அவர் வேலை செய்து இரக்கின்றார்.
அந்த வருசமே சம்பந்தன் சக்திதாசன்,இந்துமதி என்ற இரண்டு பிளளைகள்; 5 வகுப்பில் கொலசீப் பாஸ் பண்ண வைத்தார்.படிப்பிக்கிற முறையில் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்தார்.முக்கியமாக காலையில் நியுஸ் பேப்பர் வாசிப்பது.ஒரு நாளை;க்கு ஒவ்வொரு பிள்ளையும் ஐந்து திருக்குறலும்,ஐந்து ஆங்கில வார்த்தையும் கட்டாயம் பாடமாக்கணும் எனக் சட்டம் கொண்ட வந்தார்.எந்த நிகழ்விலும் எல்லோரும் பங்கு பெற வைத்தார்.கையெழுத்து பிரதி ஒவ்வொரு வகுப்புக்கும் கட்டாய படுத்தினார்.
எங்களோடு ரொம்ப பிரண்லியாக இருப்பார்.எனக்கு நல்ல ஞாபகம் ஒரு பேச்சுப்
போட்டிக்காக நான் கலந்த கொண்டேன்.பேச்சுப்போட்டீக்கு போட என்னிடம் சப்பாத்து இல்லை.அவரே எனக்கு சப்பாத்து வேண்டி தந்து அன்றைக்கு சப்பாத்து எப்படி போட்டு நடப்பது என மைதானத்தில் கூட்டிக்கொண்டு போய் பழக்கினார். ஓரு 10 வருடத்துக்கு பிறகு அவருடைய ரைமில் தான் குப்பிழான் பாடசாலையில் இருந்து உயர்தரம் படிக்க போதுமான புள்ளி மாணவர்கள் பெற்றார்கள்.
மறக்க முடியாத ஆசிரியர்கள் நிழல் போல் வாழ்க்கை எல்லாம் வந்த கொண்டு இருப்பார்கள்.அவர்கள் கட்டாயமாக ஒவ்வொரு மாணவனின் வாழ்கையிலும் ஒரு மாற்றத்தை கொண்டு வருவார்கள்.என்னால் வேலாயுதம் மாஸ்ரரை என் ஆயுளில் மறக்க முடியாது.நான் அவருக்க நிறைய நன்றி கடன் பட்டுள்ளேன்

1 கருத்து:

படியுங்கள் படித்தபின் ஏதாவது சொல்லுங்கள்