வெள்ளி, 12 ஜூலை, 2013

முதல் காதல் கதைகள்

             ------------------------------------

ஒரு காதலை பக்கத்தில் இருந்து ரசித்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது.அது ஒரு யாதர்த்தமான காதல்… அப்படி ஒரு காதலை அதற்க்கு பிறகு நான் பார்க்கவில்லை
அன்பரசன்னா நிதியக்க கதை ….
அன்பரசன்ன ஒரு இராஐகுமாரன் மாதிரி இருந்தார் நடந்தால் இராஐகுமாரன், இருந்தால் இராஐகுமாரன், நித்திரை கொண்டால் கூட எட்டுத் தேசத்தை கடந்த இராஐகுமாரன் துயில் கொள்ளுவத போலவே நித்திரை கொள்ளுவார்.சரியாக ஒரு 10 மணியளவில் நிதியக்க அன்பரசன்ணாவை பார்க்க வருவாங்கள் ராசுமாவின் ஹாலில் அன்பரசன்னா கட்டிலிலை இருப்பார் நான் கொஞ்சம் பக்கத்தில் இருப்பேன் nஐயந்தியக்கா இருப்பாங்ககள் நிதியக்கா ஒரு 10 அடி தள்ளி கதிரையில் இருந்து அன்பரசன்னா வோட பேசுவா…அன்பரசன்னா வோட எந்த சப்பெஐ; என்றாலும் பேசலாம் என்னைப் பொறுத்த மட்டில் அவர் ஏழு கடலை கரைத்து குடித்தவர்… 
மெல்ல மெல்ல அவரகளுக்குள் ஒர் காதல் துளிர்த்து கொண்டே வந்தது.அப்ப நிதியக்கா ஒரு சிறுகதை கூட எழுதி கொண்ட வந்தவா..நானும் அன்பரன்னாவும் அதை படித்தனாங்கள்…. அதிலை கதாநாயகி கடைசியல் இறப்பதது போல இருந்தது. மணித்தியால கணக்கில் அன்பரசன்னா கதைக்க கதைக்க நிதியக்கா அன்பரசண்ணாவை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருப்பார்.இருவருக்கும் இடையில் இருந்த  அந்த 10 அடியை தாண்டி அவர்கள் பக்கத்தில் நின்ற கதைச்சதை நான் பார்கவே இல்லை…அது ஒரு அருமையான காதல். அது ஏன் அருமையான காதல் என இன்றைவரைக்கும் எனக்குத் தெரியவில்லை..ஒரு புன்னகையில் ,ஒரு சிறு முக அசைவில் காதலின் மொத்த உணர்வையும் கொண்டு சென்ற படியால் இருக்கலாம்…
ஒரு இராஐகுமாரனை அடைய ஒரு இராஐகுமாரி தேவை இல்லை. நிதியக்கா போல மனசு முட்ட அன்பு இருந்தால் போதும்

நான் இன்னொரு காதல் கதையை சொல்லப்போறேன்.ஆனால் நான் மேலே சொன்ன காதல் கதையோடு நீங்கள் நிறுத்தி விட்டு கீழே படிக்காமல் விடுவது நல்லது. கீழே உள்ள கதை அது ஊர் வம்பு. உங்கள் கதையாக கூட இருக்கலாம். படிச்சு முடிய ஒரே குழப்பாமாக இருக்கும்.இதெல்லாம் காதலா என்ற பெரிய குழப்பம் ஏற்படும். நாங்கள் அதை விரும்பி செய்தோம் என்பதை நான் வெட்கத்தோடு ஒத்துக்கொள்ளுறேன்.
இல்லை நான் படிக்க போறேன் என்றால் அது உங்கள் தலை விதி உங்களை பற்றி இப்படி பப்பிளிக் மீடியாவில் எழுதுகிறேன் என்று எதாவது கெட்ட வார்த்தைகள் என் மேல் வீசுற ஐடியா இருந்தால் சொல்லுங்கள் ஆகக் கூடிய கெட்ட வார்த்தை தெரிந்த ஒருத்தரின் போன் நமபர் உங்களுக்கு தருகிறேன்.
அவன் எனக்கு முன்னால் மண்டையை சிலிப்புக்கொண்டு சப்பாணி கட்டிக்கொண்டு இருக்கும் போது ஒரு பெரிய காதல்கதையை சொல்லுவான் என்று தெரிந்து இருந்தால்; துண்டைக் காணாம் துணியைக் காணோம் என ஓடியிருப்பேன். அதுவும் ஊர்க் காதலை சொல்லிக் கொண்டிருந்தான் .அவன் அந்த பழைய காதல் கதையை சொல்வதற்ககே இவ்வளவு தூரம் பிளைற் பிடித்து வந்தவன் போல கதைச்சான்

        மச்சான் சரியாய் 8:00 க்கு கொலணி சந்தியை தாண்டுவா

            மச்சான் அவள் எட்டு மணிக்கு கொலனி சந்திக்கு வருவாள் எனத் nதிரிந்தும் நான் வீட்டை ஆறு மணிக்கு ரெடியாகி விடுவேன்.கொலணி சந்தியில் இருக்கிற பெரிய பிரச்சனை நிக்கிறத்துக்கு சரியான் இடம் இல்லை…எண்டாலும் நிக்;கணும் அதற்க்காவே ஆரம்பத்பத்தில் ஒரு மாதம் சரியாய் கஸ்டப்பட்டேன் ….பிறகு அந்த ஏரிய பொடியங்கள் சினேதம் ஆகி விட்டாங்கள்….அதற்க்கு பிறகு அவங்களோடு பேசுற மாதிரி அதிலை நிப்பேன். ஆனால் அதிலையும் சின்ன சிக்கல் எனக்கு வந்தது.அந்த பொடியலில் ஒருத்தன் அவளிலை கண் வைக்க தொடங்கி விட்டான் அது எனக்கு பெரிய மன உளைச்சலை தந்தது.எண்டாலும் அந்த பொடியனுட்டை சைக்கிள் இல்லதா படியால் கொலணி சந்தியில் நின்று வாய் பார்க்கிற தொடு அவருக்கு போய் விட்டது.நான்  அவளுக்கு பின்னாலேயே போவேன்……
    இந்த இடத்தில் என் நண்பண் நிறுத்தினான் நான் ஒரு பிள்ளையை லவ் பண்ணினது உனக்கு அதிர்சியாக இருந்து இருக்கும் என சொன்னான். ஏனக்கு உண்மையாக அதிர்சியாக இல்லை…..
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது ரூபண்ணா தான் ஒரு பிள்ளையை லவ் பண்ணுறேன் என கன்னீமார் கோயிலடியில் சொன்ன போது தான்….ரூபண்ணா லவ் பண்ணுவாறா ?யாரும் ரூபண்ணாவுக்கு முன்னால் நிமிர்ந்து கதைக்க மாட்டோம் எப்பவுமே எதாவது ஒரு விசயம் இருந்தது அவருக்கு எங்களை திட்டுவதற்க்கு…இதெல்லாம் வைச்சு ரூபண்ணா லவ் பண்ண மாட்டார் என நான் நினைக்கவில்லை.ஆனால் ஏனோ ரூபண்ணா லவ் பண்ண மாட்டார் என நான் 100 வீதம் நம்பினேன்.காதல் என்பது தப்பு என்ற மன நிலை எனக்கு இருந்து இருக்கலாம் அதனால் ரூபண்ணா தப்பு செய்ய மாட்டார் என்ற உளவியல் உள் குத்து எனக்கு இருந்து இருக்கலாம் அதனால் எனக்கு அதிர்சி ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் கடைசில் அவர் லவ் பண்ணித்தான் கல்யாணம் கட்டினார்.
ஆனால் இப்ப இந்த நிமிடம் இந்த பிளைற் பிடித்து வந்து தன் காதால் கதையை சொல்லுற நண்பன் மேல் எனக்கு அதிர்ச்சி ஏற்பட வில்லை.ஆனால் நண்பன் ஏன் எனக்கு இந்த கதையை சொல்லறான் என்ற குழப்பம் இருந்தது.
ஆனால் உடனடியாக ஒரு ரியாக்சன் காட்ட வேண்டிய தேவை எனக்கு ஏற்ப்பட்டது. உடம்பில் இருக்கிற சகல ரத்தத்தையும் முகத்துக்கு கொண்டு வந்து வாயை ஒரு சுழிப்பு சுழிச்சு அப்ப உனக்கு எத்தனை வயசு மச்சான் என நான் கேட்டேன்.
ஏல் ஓ எல் படிச்சுக்கொண்டு இருந்தேன் மச்சான் ….அப்ப நான் கணக்கு போட்டு பார்த்தேன் நிச்சயமாக அவள் பத்தாம் ஆண்டு அல்லது ஒன்பதாம் வகுப்பு….
ஆனால் அவன் என்னிடம் இருந்து எந்த ஒப்பிணினும் எதிர்பார்க்கமால் தன் கதையை சொல்ல தொடங்கினான்…
மச்சான் அவள் எப்பவும் தனிய போறதே கிடையாது அவளுளோடு எப்படியும் நாலு வேறு பொம்பிளை பிள்ளைகள் போகும்.நானும் தனிய பொறது கிடையாது என்னோடும் இரண்ட மூன்று பொடியல் வருவனம் …..அவள் அப்படியே காற்றிலே பஞ்சு பறக்கிற மாதிறி போய் கொண்டே இருப்பாள.;ஒரு கையால் அவள் சைக்கிள் ஓடும் போது மேலே வாருகிற  பாவடையை சரி யெ;து கொண்டே போவள்…சரியாக தொண்ணுரு பாவையில் தலையை வைச்சு கொண்டு போவாள்.சரியாக சைக்கிளை பத்து மிதி மிதித்தால் ஒரு மிதி பின் பக்கம் பிரிலில் சுத்தவாள்…அந்த நேரத்தில் தான் ஒரு பார்வை இரண்டு பக்கமும் 40 பாவை திருப்புவாள்…. அந்த முப்பது பாவைக்கு மேல் ஒருநாள் கூட அவள் தலை திருப்பியது இல்லை.அனால் அந்த கொஞ்ச சொப்ப நிமிடத்தில் அவள் கண் முழு வட்டம் அடித்து நாங்கள் பின்னால் வாரோம் என்பதை ஊர்ஐpதப்படத்தி விடும்.
மச்சான் அந்த ஒற்றைப்பார்வை தான் மச்சான் எனக்கு இன்றை வரைக்கும் வழி காட்டுறது…நான் இந்த இடத்தில் பயந்து விட்டேன் ஏதாவது கவிதை சொல்லி என்னிடம் ஒப்பினியன் கேட்பானோ என ஆனால் எனக்கு அந்த மாதிரி எந்த கஸ்ட ஐPவனமும் வைக்காமல்  நண்பன் தன் காதல் கதையில் மூழ்கி இருந்தான்….

பின்னேரம் புன்னாலைகட்டுவன் சந்தியல் நிப்பேன் அப்ப வருவாள் மச்சான் அப்பதான் அவள் உண்மையான வடிவு தெரியும்…தலையை இழுத்து பின்னல் போடமல் ஒரு கிளிப்பால் மட்டும் அஐ;யெல்மென்ற பண்ணி வருவாள்….மச்சான் அந்த இடத்திலேயே ஒவ்வொரு நாளும் சாவேன் மச்சான்..
புன்னாலை கட்டுவன் சந்திக்கு வந்த கையோடு ஒருக்க தலையை சிலுப்புவாள் …அந்த சிலிப்பளில் அவள் கண்ணு புன்னாலைகட்டுவன் றோட்டிலை யார் யார் நிக்கினம் என்ற எல்லாத்தையும் பார்த்து விடுவாள் மூன்றே மூன்றே கொப்பிhன் மச்சான் பின் கறியரில் வைச்சு இருப்பாள்…ஏதோ கட்டி இழுக்கிற மாதிரி நான் அவளுக்கு பின்னாலேயே போவேன் மச்சான்…
சரியாக ஒரே அளவான பூவை தலையில் இரட்டை தலை பிரிகிற இடத்தில் வைப்பாள்.அந்த பூ ஒரு நாளும் பெரிய பூவாகவும் இருக்காது சின்ன பூவாகவும் இருக்காது..இதிலை பார் மச்சான் எல்லா வகையான பூவும் வைப்பாள் அனால் எல்லாமே ஒரே சைஸ் தான்…அவளுடைய நினைவிலே வார எத்தனையோ அதிசங்களில் இந்த பூ விசமும் ஒன்று….புன்னாலை கட்டுவன் சந்தியை தாண்டிhல் தான் அவளுக்கு இருக்கிற மவுசு தெரியும் 100 மீற்றருக்கு ஒருத்தன் அவளுக்காக வெயிற் பண்ணிக்கொண்டே இருந்தாங்கள்…இவ்வளவு பேரோடை போட்டி போட்டு எப்படி அவளை என்னை லவ் பண்ண வைக்கிறது என்று ஓரே யோசனை மச்சான்…  இந்த கதைக்கு முடிவு எப்படி இருக்கும் என எனக்கு ஒர குழப்பமா இருந்தது….
அவள் உன்னைக் காதலிச்சவளா என்ற உலக மகா கிறுக்குத்தனமான கேள்வியை நான் அவனிடம் கேட்டேன்..அந்த கேள்வியை நான் அவனிடம் கேட்டு இருக்கக் கூடாது…அப்பு சொல்லுவார் சனியன் நாக்கிலே தான் என்று….அவன் அவள் காதலித்தாள் என்று நிறுவ சில பல சம்பவங்களை சரியாக 135 நிமிடம் சொன்னான்.மணித்தியால கணக்கு நீங்களே பாருங்கள்……
மச்சான் காதலித்தாள் மச்சான்.என்னால் அதை சுவர் பண்ணி சொல்ல முடியும்.
ஒருநாள் சைக்கிள் காத்து போய் றோட்டுக்கரையில் நின்றாள். நான் வந்து அவள் பக்கம் சைக்கிளை சிலோவ் பண்ணினேன். ஓற்றை வார்த்தை மட்டும் தான் சொன்னாள்
“காத்து போய்விட்டது” என்று.சரி நான் சைக்கிளை கொண்டு வாரேன் என்றேன்.அவள் ஒரு வார்த்தையும் கதைக்கமால் தன்னுடைய பிரண்டுடைய சைக்கிளில் பின்னாலே ஏறி இருந்து கொண்டு போனாள்…..
இந்த இடத்திலே நண்பன் தன் கற்பனை வளத்தை இன்னும் மெருகேற்றினான் மச்சான் அவள் சைக்கிள் ஓடித்தான் இதுவரை பார்த்தேன் முதல் முதலாக அவள் சை;கிளிலே இருந்து போறதை அன்று தான் பார்த்தேன்.அப்படி சைக்கிலே இருந்து போகிற போது கூட அவள் இன்னொரு அழகியாக இருந்தாள்.
இதோடு அவன் என்னை விட்டு இருந்தால் கூட பரவாய் இல்லை இன்னம் ஒரு எக்ஸ்ரா ஒரு வசனம் சொன்னான்
மச்சான் அவள் சைக்கிள் கூட  பூ போல இருந்தது. இந்த வசனத்துக்கு எப்படி ரியாக்சன் காட்டுவது என்று நான் தவியாய் தவித்தேன்…
என்னடா காத்து போன சைக்கிளை தந்தாள் காதல் ஆகுமா ?என நான் கேட்டேன்..
மச்சான் அந்த நேரத்தில் எங்களை நம்பி ஒருத்தர் சைக்கிளை தருகிறார்கள் என்றால் எங்களில் எவ்வளவு நம்பிக்கை என்றான்.நம்பிக்கை தான் காதலின் அஸ்த்திவாரமே என்று எக்ரா பிட் தத்துவம் சொன்னான்
அந்த லாஐpக் எனக்கு எற்க கூடியதாக இருந்தது.அந்த நேரத்தில் சைக்கிளை இன்னொருத்தனிடம் யாரும் நம்பி கொடுப்பது இல்லைத்தான்…
ஏனக்கு ஒரு மாமா இருந்தார் அவரிடம் ஒரு ரலி சைக்கிள் இருந்தது.அவர் மாமியுயோடு இருந்ததை விட பிள்ளைகளோடு இருந்ததை விட அந்த ரலி சைக்கிளோடு இருந்தது தான் அதிகம்.அது லண்டன் ரலி சைக்கிளாம் நான் ஒரு விசயம் கவனித்தேன் அவர் அந்த சைக்களை ஓடியதை விட அதை துடைத்துக்கொண்டு இருந்த காலம் தான் அதிகம் ஒரு தூசு எங்கள் கண்ணுக்கு தெரியாது ஆனால் அவர் துடைப்பார்
சைக்கிளுக்கு எங்கள் பொடியல் செய்கிற வேலை இருக்கே கம்பிக்கு மினுக்கல் துண்டு என்னா? ரிம்முக்கு பூ என்னா? வாருக்கு அந்த மாதிரி கவர்  அதற்க்குள் ஒரு வயர் கருப்பு வயர் சுத்தவாங்கள் அதை சுத்த இரண்டு மணித்தியாலயம் எடுக்கும் .இரண்டு காண்டிலும் இரண்டு பெல்… ரிம் எப்பவுமே வெள்ளி போல மினுங்கும்.இடையில் ஒரு ஸ்ரையில் வந்தது கீழ் வாரில் உள்ள கொழுக்கியில் சின்ன காத்து பம்ப் வைக்கிறது.ஆனால் காத்து பம்ப் காத்து அடிக்காது.முன் மக்காட்டில் குதிரை அல்லது யானை..டைனமோர் மிக முக்கியமாக இருந்துது.
பாட்டுக் கேட்க…செய்தி கேட்க அப்ப அந்த டைனோமோர்தான் உதவியது.டைனோமோர் முறித்து குடும்பம் நடத்திய கள்ளர் நிறையப்பேர் முந்தி யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள்.அதை பிடிக்க என ஸ்பெசல் பொலிஸ் கூட இருந்தார்கள்.
ஐந்து பிள்ளை பெற்றவர்கள் கூட சைக்கிள் கடை வைச்சு ஆமோகமா உழைத்து நல்லாய் இருந்த ஆதாரங்கள் நிறைய என்னிடம் இருக்கிறது.
இந்த இடத்தில் இதை கட்டாயம் சொல்லனும்
ஓயாண்ணாவின் தவத்தான் எல்லாம் சைக்கிலில் மோட்டர் சைக்கிளில் கண்ணாடி போடுவது போல தன்னுடைய சைக்கிளில் இரண்டு கண்ணாடி போட்டு தான் லவ் பண்ணற பொண்ணுக்கு முன்னால் சைக்கிளை ஓடி அவள் எப்படி போறாள் எப்படி வாராள் என பார்த்து லவ் பண்ணினான்..இது ஒர் வித்தியாசமான கண்டுபிடிப்பு பொம்பிளை பிள்ளைகளின் பின்னாலேயே போய் மண்டை காய்ஞ்ச எங்களுக்கு அது ஒரு அருமையான கண்டுபிடிப்பு போல இருந்தது.ஆனால் அதிலும் சில சிக்கல் இருந்தது.நடமுறை சிக்கல் பல இருந்த படியால் ஓயாண்ணா வின் தவத்தான் போல வேறு யாரும் சைக்கில் கண்ணாடி மாட்டி பொண்ணக்கு முன்னால் போய் சைட் அடித்ததை நான் பார்க்கவில்லை.இன்றை வரைக்கும் வேறு எந்த நாட்டிலும் பார்க்கவில்லை…

மற்றும் சில ஆதாரங்கள் எனது நண்பன் அவள் தன்னை காதலித்ததுக்கான அதாரங்களாக சொன்னான்
அது சில வேளை அவள் தன்னை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தது.
தான் நிக்கிறேனோ என சில இடங்களில் அவள் தேடியது.
தன்னைப் பார்த்த உடன் தன்ரை தோழிக்கு ரகசியமாக எதோ சொன்னது.
ஒரு நாள் கோயிலில் விபூதி தந்தது
ஒரு நாள் ……

இப்படி பல சங்க கால காதல் சங்கேத குறிகளை சொன்னாலும் எனக்கு எதோ சின்ன சந்தேகம் இருந்து கொண்டு இருந்தது.

எனக்கு அந்த கதையை கேட்க சரியான அலுப்பாக
இருந்தது.சரியாக இரண்டு வருடம் பின்னாலே போனவன்.
ஒரு காதல் கடிதம் எழுதி அதை கொடுக்க சரியான தருணம் இல்லலாமல் அலைந்தவன்.
சரியாக செட்டு ஆகிற நேரத்தில் 1995 ம் ஆண்டு இடம் பெயர்வில் இவன் எங்கேயோ அவள் எங்கேயோ போய் கடைசியல் இவன் ஒரு வெளிநாட்டில் போனதாக அவன் கதை நீண்டு போனது…
அது கிட்டதட்ட என்னுடைய ,ரூபண்ணாவுடைய,தவத்தானுடைய,கண்ணனுடை,அரவிந்தனுடைய இன்னும் எனக்கு தெரிந்த 387 பேருடைய கதை போல இருந்தது.
அடுத்த நாள் அவனிடம் கேட்டேன் மச்சான் பேந்து யாரையாவது லவ் பண்ணிணாயா? ஏன
அவனும் ஓமடா மச்சான்
பாங்கொக் இருந்த போது இரண்டு பொட்டையை ஒரே நேரம் லவ் பண்ணனேன்.அதுகளும் என்னனை லவ் பண்ணியது.பிறகு மலேசியவில் ஒரு மலாய் பொண்ணை லவ் பண்ணனேன் அவளும் லவ் பண்ணினால்..பிறகு கென்யாவில் ஒரு பொண்ணை லவ் பண்ணனேன். குறை வைக்க கூடாது என்று எனக்கு தஞ்சம் தந்த நாட்டில் இரண்டு வெள்ளைக்கரிகளை லவ் பண்ணினேன்.பிறகு அம்மா பார்த்த பொண்ணை கல்யாணம் கட்டினேன்.எண்டலும் அவள் போல வராதடா அவளை மட்டும் எனக்கு அண்டவன் தந்து இருந்தால் என்ரை லைவ்வே மாறி இருக்கும்
நான் அவளை தங்க தட்டில் வைச்சு பார்த்து இருப்பேன் என்றான்.
அந்த விளல் கதைக்கு நான் பதில் சொல்ல வில்லை இந்த வசனத்தை எனக்கு 386 பேர் ஏற்க்கனவே சொல்லிவிட்டார்கள்.



ள்.அவளுக்கு பின்னாலேயே போவேன்.அவளுக்கு பின்னால் போகத் தொடங்கினத்துக்கு ஒருநாள் கூட என்ரை பள்ளிகூடத்துக்கு சரியான நேரத்துக்கு போனது இல்லை. உண்மையாயக மச்சான் அவள் பள்ளிக்குட உடுப்பிலை ஒரு வடிவு.அதுவே பின்னேரம் கலர் உடுப்பிலை ரியுசனுக்கு போகிற நேரத்திலை வேறே ஒரு வடிவடா மச்சான் என அவன் தன்னுடைய கதையை ஆரம்பித்தான். மோத்தமாக அவன் 1332 மச்சான் சொன்னான்.ஒன்று கூடலாம் அல்லது குறையலாம்.கதையியினுடைய போக்கிலை சில மச்சான் ஒரு எடுப்பை கொடுத்தது.சில மச்சான் அவன் தன் பழைய நினைவை மீட்க உதவியது.ஆனாலும் நான் முழு மச்சானையும் எழுதாமல் சில இடத்தில் மட்டும் மச்சானை போடுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படியுங்கள் படித்தபின் ஏதாவது சொல்லுங்கள்