ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

வார்த்தைகள்


        இண்டைக்கு நிறைய வார்த்தைகள் ஏனோ நாகரியம் இல்லை என்று இல்லாமல் போய்விட்டது.அந்த வார்த்தைகளை யாரவது எப்போதவது சொல்லும் போது ஒரு புதுச்சொந்தமும் மரியாதையும் அவர்களுக்குள் இடையில் ஏற்ப்படுகின்றது.எப்பவும் எங்களில் இருந்து தவறிய அந்த வார்த்தைகள் இப்பவும் எங்கள் உடம்பின் ஓரத்தில் ஒளிச்சுக்கொண்டுதூன் இருக்கின்றது.
                                                துரைமாமாக்கு எப்பவும் நாங்கள் வீட்டை போனால் ஏகப்பட்ட குஷி.எதை எமக்கு தரலாம் என வீடு புள்ளாக அலைவார்.கடைசியல் கை மடிப்பிக்குள்ளே இருந்து கிளியப்போற இரண்டு ரூபாய் நோட்டைத் தூக்கித் தருவார்.வள்ளியாச்சி கிளம்ப போற எங்களை எடேய் எப்பனாய் சாப்பிட்டுப் போட என்பா.துரைமாமா குழம்பிடுவார்
என்ன எப்பன்..?உனக்கு பிள்ளைக்கு சாப்பிடு குடுக்க விருப்பம் இல்லை அதுதான் எப்பனாய் சாப்பிடு என்கிறாய் என்று சத்தம் போடத்தொடங்கி விடுவார்
 எணேய் சும்மா சத்தம் போடதணை என்கிற வள்ளியாச்சி தாற சாப்பாடு சப்பிட்டு முடிய எங்களுக்கு
கண் பிதுங்கி விடும்
இந்த எப்பன் என்ற வார்த்தையை எங்க ஊர்ச்சனம் பாவிப்பது எப்பவுமே அதிகமாக சாப்பாட்டு விசயத்தில் தான்
ஒரு நாள் ரூபண்ணவும் குமார் அண்ணாவும் திடும் திடுமென புவனமக்கா வீட்டை போய்விட்டாங்கள்.எல்லோரும் வேலைக்கு போட்டீனம்.அன்னையாச்சி மட்டும் இருந்தாங்க.புவனமக்கா வீட்டை அன்னமுன்ன பழமரம் இருக்கு முதல் நாள் தான் இருவரும் அதிலே பழம் களவாடினவர்கள்.அதை தேவியக்கா ராசுமாமியிட்டை சொல்லி ராசுமாமி நல்ல அடி ரூபண்ணாவுக்கு.அந்த கோபத்தில் போன இரண்டு பேரும் கொடியிலை காய்ச்சு கொண்டிருந்த அன்னையாச்சியின் சாறியை எடுத்து கிளிச்சுக்கொண்டிருச்தாங்கள் அன்னையாச்சி கண்டு வெல வெலத்துப் போனங்கள்
ஏடேய் மோனே உதை எண்ட கிளிக்கிறிங்கள் என்று அழாக்குறையாக கேட்க
கந்தையாண்ரை பொடியனும்,வசந்தவின்ரை பொடியனும் தான் கிளிச்சது என்று உன்ரை பேத்திக்கு சொல்லுங்க என்று வந்துட்டங்கள்.அதற்க்கு பிறகு கொஞ்சக்காலம் இவையள் இரண்டு பேரும் வீரமனை ரவுடியாக உலவியது தனிக்கதை.
பிறகு ஒரு சத்தர்ப்பத்தில் ரூபண்ணாவை நான் இதைப்பற்றி கேட்கும் போது
அன்ணையாச்சி எடேய் மோனே எனக் கூப்பிட்டது இன்றைக்கும் கண்ணுக்குள் ஆடுகிறது என்றார்
அது சரியான பிழையான வேலை என கூறிக்கொண்டார்
மோனே என்ற வார்த்தை கிட்டத்தட்ட ஒரு மலையாள வார்த்தை போல இருந்தாலும் எப்படி எங்கள் மண்ணில் உலவியது எனப் புரியவில்லை.மிகவும் அழகாக அன்பையும்,ஆதங்கத்தையும் இவ் வார்த்தை கொண்டு வரும்.இப்ப இந்த வார்த்தையை பாவிப்பவர் இல்லை என்கிற அளவுக்கு வந்துவிட்டது.
குறுக்கால போவன்,கட்டையில் போவன் என்ற வார்த்தையை பெறுப்பாலும் இந்த வார்த்தையை பொயிலை பேரம் முடிந்து போனப்போல பேசுவார்கள்.
குறுக்காலை போவன் இவ்வளவு செலவளித்து விட்டு இருக்கின்றோம் நோவமல் 5000 ரூபாய் கேட்டு போறான்.
கோழித்திருட்டுக்கு பேசுற வார்த்தை கட்டையில் போவன்.நாங்கள் அந்த பக்கத்தில் போகும் போதுதான் பேசுவார்கள்.பேசுறவங்களுக்கு பக்கத்தில் ஐயா பொடியண்ணா சில வேளை நின்று ஓமணை ஓமணை என்று சொல்லிக்கொண்டு நிற்ப்பார் எங்கடை வெள்ளாந்தி சனத்துக்க தெரியாது எங்கன்ரை கோழித்திருட்டுக்கு லீடரே ஐயப்பொடிண்ணா தான்.
ஆச்சிக்கு எப்பவும் ஒரு பழக்கம் இருக்கு உண்ணானை என்று அவங்க சத்தியம் பண்ணினால் அவங்க அந்த சத்தியத்தை மீற மாட்டங்கள்.நான் உண்ணானை என்று ஆச்சியிடம் சத்தியம் கேட்டுவிட்டால்
ஆதைப்பற்றி பிறகு கவலைப்படுவது இல்லை.இன்னைக்கும் உண்ணானை என்று யாரவது சொன்னால்.ஏதோ அவர்கள் உண்மைதான் சொல்லுறார் என முடிவு எடுத்து விடுவேன்
 
சாதரணமாக எங்க ஊரிலே எந்த நடிகரின் பெயரையும் சரியாக உச்சரித்தது இல்லை.
எம்சியார்,சிவாசி,விசயகாந்து,ரசனிக்காந்து,சத்தயராசு,கமலூ(),கடைசியாய் விசய் அது வரைக்கும் அந்த நாட்டில் தான் இருந்தேன்.இப்ப எப்படி என்று தெரியவில்லை அசித்து என்று யாரும் சொல்ல மாட்டார்கள் என்றுதான் நினைக்கின்றேன்.சாதரணமாகவே ஊரில் சொல்லும் வார்த்தைகள் மிக நெருக்கமாக இதயத்துக்கு பக்கத்தில் இருந்து சொல்வது போல இருக்கும்.நிறைய வார்த்தைகள் இப்படி காணமல் போய்விட்டது வார்த்தை மட்டும் அல்ல பொருட்களும் தான் உதாரணத்துக்கு மூக்கூப்பேணி.
                                எங்கேயாவது இருந்தால் எடுத்து எனக்கும் தாருங்கள்
(ஊண்ணானை-எப்பனாககுறுக்காலை போவன்-உன்ரை விசர்க்கதை-வடிவான பொட்டை-என்ரை ராசா-முசுப்பாத்தி-ஐசே-நடுச்சென்றரில்-உங்காலை-படுவராஸ்கல்-எடே மோனே-அங்கலை-கக்கூஸ்-கட்டையில போவான்-தேத்தண்ணி-முக்கூப்போணி-பொட்டை- சினேதப்பொடியன-ரசனி-சிவசிகனேசன்-எம்சியார்-விசியகாந்து-திண்ணடா-பேந்து………)
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படியுங்கள் படித்தபின் ஏதாவது சொல்லுங்கள்